undefined

 தடுப்புச் சுவர் மீது மினி வேன் மோதி விபத்து... 2 பெண்கள் பலி!

 

திருநெல்வேலியில் இருந்து பெண்கள் உள்பட 11 கூலித் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு மினி வேன் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை நோக்கி சென்றது. வழியில் விருதுநகர் மாவட்ட நெடுஞ்சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மேம்பால தடுப்புச்சுவரில் மோதியது.

இந்த கோர விபத்தில் மினி வேனில் பயணித்த 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 2 சிறுவர்கள் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர். விபத்து நடந்ததும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!