திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ தாயார் காலமானார்... அரசியல் தலைவர்கள் இரங்கல்!
மன்னார்குடி அடுத்த கோட்டூர் காடுவாக்குடியைச் சேர்ந்த மறைந்த கண்ணுவின் மனைவி தங்கம்மாள் (82) வயது மூப்பின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஜன.18) காலமானார். அவரது மறைவு அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது இறுதிச்சடங்குகள் இன்று மாலை 4 மணிக்கு காடுவாக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தங்கம்மாளுக்கு திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில துணைச் செயலர் க.மாரிமுத்து மற்றும் நான்கு மகள்கள் உள்ளனர். தொடர்புக்கு: 94435 30487.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!