பால்கனியில் இருந்து ரூ200, ரூ 500 நோட்டுக்கள் 'பண மழை'... கட்டுக்கட்டாக வீசிய பெண்... வைரல் வீடியோ!
அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் நின்ற பெண் ஒருவர், திடீரென கட்டுக்கட்டாக இருந்த ரூபாய் நோட்டுகளைக் கீழே வீசிய சம்பவம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. வானத்திலிருந்து 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மழையாகப் பொழிவதைக் கண்ட பொதுமக்கள், ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அடுத்த சில நொடிகளில் அந்தப் பகுதியே போர்க்களமாக மாறியது.
"அந்தப் பெண் ஏன் இப்படிச் செய்தார்?" என்பதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இது ஏதேனும் சினிமா படத்திற்கான விளம்பர உத்தியா அல்லது குடும்பப் பிரச்சினையில் ஆத்திரத்தில் செய்த காரியமா என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறக்கின்றன. ஒரு சிலர் "பணக்காரத் திமிர்" என்று சாடினாலும், ஒரு சிலர் அந்தப் பெண்ணின் மனநிலை குறித்துக் கவலை தெரிவித்து வருகின்றனர்.தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், அந்தப் பெண் யார்? எதற்காகப் பணத்தை வீசினார்? என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!