தென்னாப்பிரிக்காவில் பெருவெள்ளம்: 100க்கும் மேற்பட்டோர் பலி! 2 லட்சம் பேர் பாதிப்பு!
தென்னாப்பிரிக்கா, மொசாம்பிக் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் அதீத கனமழை காரணமாகப் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இயற்கைச் சீற்றத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடு மொசாம்பிக் ஆகும். அங்கு மட்டும் இதுவரை 103 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் மூழ்குதல், மின்னல் தாக்கம் மற்றும் காலரா போன்ற நோய்த்தொற்றுகளால் இந்த உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன. சுமார் 2 லட்சம் மக்கள் தங்களது வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
தென்னாப்பிரிக்காவின் லிம்போபோ மற்றும் மப்புமலங்கா மாகாணங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்குள்ள புகழ்பெற்ற குருகர் தேசியப் பூங்காவில் சிக்கியிருந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஊழியர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
ஜிம்பாப்வேயிலும் கனமழைக்குச் சுமார் 70 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும் அந்நாட்டுப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கி வீடுகளின் கூரைகளிலும், மரங்களின் உச்சியிலும் தவிப்பவர்களை மீட்கத் தென்னாப்பிரிக்க ராணுவம் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் மற்றும் சாலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!