undefined

நமோ பாரத் பயணிகளுக்கு ஒவ்வொரு ரூபாய்க்கும் விசுவாசப் புள்ளி!

 

தேசியத் தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகம் இயக்கும் நமோ பாரத் ரயில்கள் மற்றும் மீரட் மெட்ரோ சேவைகளில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தேசிய பொது இயக்க அட்டை பயன்படுத்தினாலோ அல்லது நமோ பாரத் கனெக்ட் செயலி மூலம் டிஜிட்டல் க்யூஆர் சீட்டு முன்பதிவு செய்தாலோ விசுவாசப் புள்ளிகள் கிடைக்கும். செலவிடும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ஒரு புள்ளி வழங்கப்படும். ஒரு புள்ளியின் மதிப்பு 10 பைசா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 300 புள்ளிகள் குவிந்ததும் இலவசப் பயணமாக மாற்றிக் கொள்ளலாம். திரட்டிய புள்ளிகள் தினசரி கணக்கில் வரவு வைக்கப்படும். உதாரணமாக ரூ.100 செலவிட்டால் 100 புள்ளிகள் கிடைக்கும். ஒரே நேரத்தில் ஐந்து பயணங்களுக்கு புள்ளிகளை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகை பயணிகளுக்கு கூடுதல் நன்மை தருகிறது.

அட்டையை பயன்படுத்துவோர் சீட்டு இயந்திரம் அல்லது கவுண்டரில் புள்ளிகளை சரிபார்க்கலாம். செயலி மூலம் முன்பதிவு செய்பவர்கள் ‘விசுவாசப் புள்ளிகள்’ தேர்வை பயன்படுத்தி சீட்டுகளை பெறலாம். திரட்டிய புள்ளிகள் ஒரு ஆண்டு காலம் செல்லுபடியாகும். இந்த திட்டம் பயணிகளை அதிகம் ஈர்க்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!