நடான்ஸ் அணு மையம் மீது தாக்குதல் ... ஐஏஇஏ உறுதி!
ஈரானின் முக்கிய அணு எரிபொருள் செறிவூட்டல் மையமான நியூக்ளியர் மீது தாக்குதல் நடைபெற்றிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக எந்த அணு உள்கட்டமைப்பிலும் தாக்குதல் இல்லை என்று தெரிவித்திருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் அதனைத் திருத்தியுள்ளது.
நிலத்தடியில் அமைந்துள்ள நடான்ஸ் ஆலையின் நுழைவாயில் கட்டிடங்கள் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டதாக ஐஏஇஏ தெரிவித்துள்ளது. மத்திய ஈரான் பகுதியில் உள்ள இந்த வளாகம், அந்நாட்டின் முக்கிய யுரேனியம் செறிவூட்டல் மையமாகும்.
தாக்குதலால் அணுக் கதிர்வீச்சு பரவுமா என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், தற்போது எந்த கதிர்வீச்சு பாதிப்பும் இல்லை என ஐஏஇஏ தெளிவுபடுத்தியுள்ளது. நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் சர்வதேச அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!