undefined

 பொங்கலுக்கு ஆம்னி பேருந்து அதிக கட்டணம்? புகார் செய்ய எண்கள் அறிவிப்பு!

 
 

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வெளியூர் செல்லும் பயணிகளை சுரண்டுவதை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் இணைந்து கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். அதிக கட்டணம் வசூலிக்கும் மற்றும் அனுமதிக்கு புறம்பாக இயங்கும் பேருந்துகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் விதிக்கப்படும். தேவையானால் வாகனங்கள் சிறைபிடிக்கப்படும்.

அதிக கட்டணம் வசூல் குறித்த புகார்களை தொலைபேசி அல்லது குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கலாம். போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் – 1800 425 6151. சென்னை வடக்கு – 99442 53404, சென்னை தெற்கு – 97905 50052, மதுரை – 90953 66394, கோவை – 91235 93971, விழுப்புரம் – 96773 98825, வேலூர் – 98400 23011, சேலம் – 78456 36423, ஈரோடு – 80569 40040, திருச்சி – 90660 32343, விருதுநகர் – 90257 23800, திருநெல்வேலி – 96981 18011, தஞ்சாவூர் – 95850 20865.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!