undefined

ஜனவரி 10ம் தேதி வரை  ஆன்லைன் முன்பதிவு நிறைவு... மண்டல பூஜைக்கான புதிய அறிவிப்பு!

 
 

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசன் நடந்து வருகிறது. கடந்த மாதம் (நவம்பர் 16) நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி தரிசன முன்பதிவு மூலம் அனுமதிக்கப்பட்டனர். சீசனின் தொடக்கத்தில் தினமும் 70 ஆயிரம் பேர் ஆன்லைன் வழியாகவும், 20 ஆயிரம் பேர் உடனடி முன்பதிவு மூலமும் சென்றனர்.

சபரிமலை வரலாற்றில் இல்லாத அளவுக்குக் கூட்டம் அலைமோதியது. இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் பக்தர் பலியானார். இதனால் கோர்ட்டு தலையிட்டது. உடனடி தரிசன முன்பதிவின் எண்ணிக்கையைக் குறைக்க அது அறிவுறுத்தியது. அதன்படி, 20 ஆயிரமாக இருந்த உடனடி தரிசன எண்ணிக்கை 5 ஆயிரமாகக் குறைக்கப்பட்டது.

தற்போது, முன்பதிவு செய்தும் பக்தர்கள் வராததால், உடனடி தரிசனத்தில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்படுகிறார்கள். விழாவின் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை வருகிற 27-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளுக்கான முன்பதிவை நிறுத்தி வைத்திருந்தனர். தற்போது அதற்கான முன்பதிவு நேற்று மாலை தொடங்கியது. மண்டல பூஜைக்கு முந்தைய நாள் (டிச. 26) 30 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மண்டல பூஜை தினமான 27-ம் தேதி 35 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த இரண்டு நாட்களும் உடனடி தரிசன முன்பதிவில் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மகர விளக்கு சீசனுக்கான முன்பதிவு ஜனவரி 10-ம் தேதி வரை முடிவடைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!