undefined

வைகுண்ட ஏகாதசி இரவில் பரம பத விளையாட்டு சொல்லும் வாழ்க்கை பாடம்!

 

மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி, பகவான் திருமாலை நினைத்து உறக்கம் துறந்து கண் விழிக்கும் புனித இரவாக போற்றப்படுகிறது. இந்த நாளில் பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறக்கப்பட்டு, அதைத் தாண்டி சென்றால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனை நினைவூட்டும் வகையில் கிராமங்களில் இன்றும் பரமபதம் எனப்படும் பாம்பு–ஏணி விளையாட்டு பாரம்பரியமாக நடைபெறுகிறது.

பரமபதம் என்பது திருமாலின் இருப்பிடமான வைகுண்டத்தை குறிக்கும். ஏணிகள் தர்மம், கருணை, பக்தி போன்ற நல்ல குணங்களைச் சுட்டிக்காட்டி ஆன்மிக முன்னேற்றத்தை உணர்த்துகின்றன. பாம்புகள் அகந்தை, ஆசை, கோபம் போன்ற தீய குணங்களால் ஏற்படும் வீழ்ச்சியை நினைவூட்டுகின்றன. ஏணியில் ஏறுவது நற்செயல்களின் பலனைச் சொல்கிறது; பாம்பால் கீழே விழுவது பாவத்தின் விளைவுகளை உணர்த்துகிறது.

இந்த விளையாட்டு வெறும் பொழுதுபோக்கு அல்ல, மனித வாழ்க்கையின் சுருக்கமான வடிவம். சுகம், துக்கம், ஏற்றம், இறக்கம் என மாறி மாறி வரும் வாழ்வை உணரச் செய்கிறது. வைகுண்ட ஏகாதசி இரவில் பரமபதம் விளையாடுவது, பாவங்களை விட்டு பக்தி பாதையில் நடக்கச் சொல்லும் ஆன்மிகப் பாடமாக கருதப்படுகிறது. இறைவன் அருளால் முக்தி கிடைக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையையும் இது வலியுறுத்துகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!