மோசமான வானிலை… ஜலந்தர் பயணத்தை ரத்து செய்த குடியரசு தலைவர்!
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தேசிய தொழில்நுட்ப கல்லூரியின் 21-வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்தார். ஆனால் மோசமான வானிலை காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பஞ்சாப் முழுவதும் அடர்ந்த மூடுபனி நிலவி வருகிறது.
இந்த மூடுபனி காரணமாக விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி ஜனாதிபதியின் ஜலந்தர் பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்க முடியாமல் போனது.
முன்னதாக அமிர்தசரஸில் உள்ள குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி நேற்று கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து பஞ்சாப் அரசு சார்பில் நேற்று மாலை இரவு விருந்து வழங்கப்பட்டது. இதில் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த மான், கவர்னர் குலாப் சந்த் கட்டாரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!