undefined

வாசலிலே பூசணிப்பூ... வச்சுப்புட்டா! வச்சுப்புட்டா | மார்கழி கோலத்தில் பூசணிப்பூ வைக்கறதுல இத்தனை சங்கதிகளா? ஓசோன் ரகசியம்!

 

இன்று மார்கழி மாதம் துவங்குகிறது. உடலை நடுநடுங்க வைக்கும் குளிருக்கு பயந்து, உச்சி முதல் உள்ளங்கால் வரை போர்த்திக் கொண்டு விடிந்த பின்னரும் தூங்குவோர் நிறைய பேர்.

ஆனால், பெரும்பாலான பெண்கள், குறிப்பாக திருமணத்திற்காக காத்திருக்கும் கன்னிப் பெண்கள் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல், அதிகாலையிலேயே எழுந்து (நம்மூரில் முதல் நாள் நள்ளிரவே கோலம் போடுவது எல்லாம் தனிக்கதை) சாணத்துடன் தண்ணீர் கலந்து வாசல்  தெளித்து கோலமிட்டு, கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்துக்கின்றனர். அப்படி மார்கழி மாதத்தில் என்ன தான் விசேஷம்?

''ஆடியில் அம்மனும், புரட்டாசியில் பெருமாளும், மார்கழியில் அனைத்து தெய்வங்களும் என, மாதத்துக்கு ஒரு தெய்வம் என்று வழிபட வகுத்துள்ளார்கள் நம் முன்னோர். ஏனெனில், ஆடியில் பலமுள்ள காற்று வீசும். அப்படி வீசும் காற்று விஷக்காற்று என்பதால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து அம்மன் கோயில்களில் உள்ள கிருமி நாசினியான வேப்பிலையின் மணத்தை சுவாசிக்கும் போது, விஷக்காற்று முறியடிக்கப்படுவதுடன், இயற்கையான ஆக்சிஜனும் கிடைக்கிறது.

இதே போல் மார்கழி மாதத்தின் அதிகாலையில், ஓஸோன் படலம் வழி, ஆரோக்கியமான, உடல் நலனைத் தரும் காற்று அதிகம் பூமியில் இறங்கும். இது நம் வியாதிகளைக் கட்டுப்படுத்தும் என்பதால்தான் மார்கழி அதிகாலையில் பெண்கள் எழுந்து சாணம் தெளித்து கோலமிட வேண்டும் என முன்னோர்கள் கூறினர். நம் உடலில் 80% ஆக்சிஜனும் 20% கரியமில வாயுவும் இருக்க வேண்டும். தவறான பழக்க வழக்கங்களால் கூடுதலாகி விட்ட விஷவாயுவான கார்பன்-டை-ஆக்ஸைடை விரட்டி ஆக்சிஜனை நம் உடல் பெறுவதால் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் பெருகி நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது. இந்த நல்ல வாயுவை சுவாசிக்கும் பொருட்டே அதிகாலை மார்கழியில் எழுவது என்பதை தெய்வத்தின் பெயரால் கட்டாயப்படுத்தி வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.

"ஏன் எல்லா விரதங்களிலும் பெண்கள் முன்னிலைப் படுத்தப்படுகிறார்கள்?"

"பெண்ணை எதற்கும் ஒப்பிட முடியாத ஓர் உயரிய இடத்தில் வைத்துள்ளது நம் சாஸ்திரங்களும் வேதங்களும். ஒரு பெண் 6 விதமான தன்மைகளைக் கொண்டவள். அவளே தெய்வமாகவும், மனைவியாகவும், குருவாகவும், நண்பனாகவும், ஆசானாகவும், போதகனாகவும் (செயல்திறன்) ஒரு ஆணுக்கு அமைகின்றாள். அந்தப் பெண்ணின் ஆரோக்கியம் நன்றாக இருந்தால்தான் ஒவ்வொரு குடும்பமும் ஆரோக்கியமாக இருக்கும். ஆகவே தான் பெரும்பாலான விரதங்களில் பெண்களின் பங்கு அதிகம் உள்ளது.''

"பெண்கள் அதிகாலையில் கோலமிடுவதன் தத்துவம் என்ன?"

"எந்த மனிதரும் தவறுகள் செய்யாமலில்லை. அறிந்து செய்யும் தவறுகள் ஒரு பக்கம், அறியாமல் செய்யும் தவறுகள் மறுபக்கம். நடக்கும் போது நம் காலடிபட்டு எறும்பு, பூச்சி போன்ற எத்தனை உயிர்கள் சாகின்றன? இதுவும் ஒருவகை பாவம்தானே? இதனால் எழும் தோஷத்தினால் கன்னிப் பெண்களுக்கு திருமணத்தில் தடை வரும். இதைத் தவிர்க்கவே பெண்கள் வாசலில் அரிசி மாவினால் கோலம் போடும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டது.

மழையினால் உணவுக்கு வழியின்றி இரவு முழுவதும் அடைந்து கிடக்கும் சிறு உயிரினங்கள் அதிகாலையில் வெளிவந்து தமக்குத் தேவையான உணவாக அரிசி மாவைத் தேடி வந்து உண்ணும். அந்த உணவினை சிறு உயிரினங்களுக்கு அளித்த பெண்களுக்கு, தோஷங்கள் அகலும்.''

''மார்கழிக் கோலத்தில் சாணம் வைப்பது ஏன்?"

''பசு மாட்டின் சாணம் அற்புத பலன்களைத் தரும் ஒப்பற்ற கிருமிநாசினி என்பது உலகளவில் பல அறிவியல் வல்லுநர்களும் ஒப்புக்கொண்ட உண்மை. நம் வீட்டைச் சுற்றிப் பரவியிருக்கும் பாக்டீரியாவை அழிக்கும் சக்தி கொண்டது சாணம். கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்களினால் நோய்த் தொற்றுகள் ஏற்படும். இதைத் தவிர்க்கவே சாணத்தில் மகாலட்சுமி உறைவதாகவும், சாணப் பிள்ளையார் பிடித்து வைத்தால் நல்லது என்றும் கூறி வாசலில் சாணத்தைக் கரைத்துத் தெளிப்பதை பழக்கமாக்கினர் நம் முன்னோர்கள்.''

''சாணத்தின் மேல் பூசணிப்பூ வைப்பது எதற்காக?"

''இப்போது இருப்பதைப் போல சொந்தங்களையும், உறவுகளையும் தொலைத்து விட்டு, மேட்ரிமோனியல் இணையதளங்களில் யாரும் அப்போது மாப்பிள்ளைத் தேட வில்லை. கல்யாணத்துக்கு தயாராகி நிற்கும் பெண்கள் இருக்கிற வீட்டு வாசலில் மட்டுமே மார்கழி மாதத்தில் கோலமிட்டு, நடுவே சாணத்தின் மீது பூசணிப்பூ வைப்பார்கள். தங்கள் வீட்டில் திருமணத்திற்கு பெண் தயாராகி இருக்கிறாள் என்பது குறிப்பால் உணர்த்துவது. அதனால் தான் மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண் கேட்டு செல்லும் பழக்கம் கை வந்தது. இப்படி ஒன்றுக்கொன்று தொடர்புடைய நல்ல விஷயங்களை அடக்கிய மார்கழி மாதக் கோலங்களால் பெண்களின் கற்பனைத் திறன் வளர்வதுடன் காசு தராமலேயே யோகாவை செய்த பலனும் கிட்டும். ஒருமுக சிந்தனை ஏற்பட்டு அறிவும் கூர்மையாகும்.

''சரி சரி சரி இப்போ ஒட்டி வச்சு இருக்கற ரெடிமேட் பிளாஸ்டிக் கோலம் பெயிண்டால் போட்டிருக்குற எல்லாத்தையும் தூக்கி அந்த பக்கமா போடுங்க. இன்னையில் இருந்தாவது அரிசி மாவுக் கோலத்தைப் போடத் துவங்குங்கள் வாயில்லா ஜீவன்களுக்கு உணவாகட்டும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!