அமைச்சர் பெரியசாமி மகள் வீட்டில் அதிரடி ரெய்டு !
திண்டுக்கல் வள்ளலார் நகரில் வசித்து வரும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகள் இந்திராணி இல்லத்தில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். நான்கு பேர் கொண்ட அதிகாரிகள் குழு காலை முதலே வீட்டுக்கு வந்து சோதனையில் ஈடுபட்டது.
கடந்த மாதங்களில் அமைச்சர் பெரியசாமி, அவரது மகன் ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இந்திராணிக்கு சொந்தமான நூற்பாலைகளிலும் அந்த துறை சோதனை செய்திருந்தது. தற்போது ஜிஎஸ்டி பிரிவு அதிகாரிகள் மீண்டும் சோதனையில் இறங்கியதால் மாவட்டம் முழுவதும் பதட்டம் நிலவுகிறது.
இந்திராணி நடத்தும் நூற்பாலைகளில் ஜிஎஸ்டி முறைகேடுகள் மூலம் வரி ஏய்ப்பு நடந்ததாக கிடைத்த புகாரின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆவணங்கள் மற்றும் கணக்குகள் பரிசோதிக்கப்பட்டு வருவதால் சோதனை மேலும் நீடிக்கக்கூடும் என கூறப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!