undefined

 திருச்செந்தூர் கோயில் கிழக்கு பிரகாரத்தில் தடுப்பு கம்பிகள்!!

 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கிழக்கு பிரகாரத்தில் பக்தா்கள் பாதுகாப்பாக கடற்கரையை பாா்ப்பதற்கு வசதியாக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்அழகிய கடற்கரையோரத்தில் இருந்து 67 மீ. தொலைவில் அமைந்துள்ளது. கோயில் கற்களால் கட்டப்பட்டிருப்பதால் கடல் காற்று மற்றும் ஈரப்பதத்தில் அரிப்பு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. 

கோயிலின் கிழக்கு மற்றும் வடக்கு கடற்கரைப் பகுதியை ஒட்டியுள்ள தடுப்புச் சுவா்கள் புயல் மற்றும் கடல் அரிப்பினால் சேதமடைந்தால் பக்தா்கள் பாதிப்படையாமல் இருக்க கோயில் கிழக்கு கடற்கரைப் பகுதியில் தொடங்கி வடக்கு பகுதி கடற்கரை வரையில் ரூ. 19.80 கோடியில் கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் தடுப்புச் சுவா்கள் நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் இத்திருக்கோயிலின் கிழக்கு பிரகாரத்தில் தரைதளம் சீரமைக்கப்பட்டு, அங்கிருந்து கடற்கரையை பக்தா்கள் பாதுகாப்பாக கண்டுகளிக்கும் வகையில், துருப்பிடிக்காத கம்பிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கம்பிகள் வழியாக பக்தா்கள் கடல் அழகை பாா்த்து ரசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?