அறிமுகமானது ரியல்மி பி4 லைட் செல்போன்கள்.. 30 மணி நேர பேட்டரி நீடிப்பு!
இந்தியாவில் பட்ஜெட் விலையில் அதிக பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களை வழங்குவதில் முன்னணியில் இருக்கும் ரியல்மி நிறுவனம், தனது புதிய தயாரிப்பான 'ரியல்மி பி4 லைட்' மாடலை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே சந்தையில் உள்ள பி4 வரிசை ஸ்மார்ட்போன்கள் 6,300mAh பேட்டரியுடன் விற்பனையாகி வரும் நிலையில், இந்தப் புதிய மாடல் ஒரு படி மேலே சென்று 7,000mAh என்ற பிரம்மாண்ட பேட்டரி திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரியல்மி வரலாற்றிலேயே அதிக பேட்டரி திறன் கொண்ட போனாக இது இருக்கும் என்பதால், அதிக நேரம் செல்போன் பயன்படுத்துபவர்களிடையே இதற்கான எதிர்பார்ப்பு இப்போதே எகிறியுள்ளது.
நீண்ட பயணங்களை மேற்கொள்பவர்களுக்கும், அடிக்கடி சார்ஜ் போட விரும்பாதவர்களுக்கும் இந்த ஸ்மார்ட்போன் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. நேற்று இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கி உள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் இந்தப் புதிய பி4 லைட் மாடலை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போதுள்ள மற்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு இந்தப் புதிய மாடல் ஒரு கடுமையான போட்டியாக இருக்கும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர். 7,000mAh பேட்டரி என்ற அம்சம் ஒன்றே இந்த போனை சந்தையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!