undefined

“மக்கள் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது...” மராட்டிய தேர்தல் வெற்றிக்கு பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

 

மராட்டிய மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 20 என இரண்டு கட்டங்களாக 286 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற இந்தத் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் பிரிவு) ஆகியவை இணைந்து சுமார் 75 சதவீத இடங்களைக் கைப்பற்றிச் சாதனை படைத்துள்ளன. குறிப்பாக, 129 நகராட்சி கவுன்சில் தலைவர் பதவிகளை பாஜக தனித்தே கைப்பற்றித் தனது பலத்தை நிரூபித்துள்ளது.

தேர்தல் களத்தில் அடிமட்ட அளவில் கடுமையாக உழைத்த பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களைப் பிரதமர் மோடி வெகுவாகப் பாராட்டியுள்ளார். கட்சியின் வெற்றிக்காகத் இரவு பகலாகப் பணியாற்றிய தொண்டர்களின் உழைப்பே இந்த வெற்றிக்கு அஸ்திவாரம் என்று அவர் புகழ்ந்துள்ளார். மராட்டிய துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இது குறித்துக் கூறுகையில், பாஜக சார்பில் மட்டும் 3,300 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாகவும், இது கட்சியின் அடிமட்டச் செல்வாக்கை உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் மகாயுதி கூட்டணி பெற்றுள்ள இந்த வெற்றி, மராட்டிய அரசியலில் அக்கூட்டணியின் பிடியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. மாநில அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே அரசியல் விமர்சகர்கள் இதனைக் கருதுகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!