நெகிழ்ச்சி!! ரூ1100 கோடி நன்கொடையை கொடுத்து விட்டு  பெயரை கூட சொல்லாமல் சென்ற நபர்!! குவியும் பாராட்டுக்கள்!!

 

கடந்த வாரத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் சக்தி வாய்ந்த் நிலநடுக்கம் ஏற்பட்டது.இதில் இதுவரை 38000 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்தன. மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. உலகம் முழுவதிலும் இருந்து துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவிக்கரங்கள் நீண்டுள்ளன. பலரும் நன்கொடைகள், மருத்துவ பொருட்கள், அத்தியாவசிய தேவை பொருட்கள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவில் துருக்கி தூதரகத்திற்குள் நுழைந்த அனாமதேய நபர் ஒருவர், கிட்டத்தட்ட 1100 கோடி ரூபாயை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாக கொடுத்துச் சென்றுள்ளார். இச்சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


பெயரை கூட தெரிவிக்காத அந்த மனிதர் சுமார் 30 மில்லியன் டாலர்களை  துருக்கி  நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரண பணிகளுக்காக வழங்கியுள்ளார். அவர் பாகிஸ்தானிய குடிமகன் என பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமது நாட்டின் குடிமகனை கண்டு உள்ளம் நெகிழ்ந்ததாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், "இவையே  மனிதநேயத்தின் அடிப்படை. மனிதகுலத்தை சமாளிக்க முடியாத முரண்பாடுகளில் இம்மாதிரியான செய்கைகளை நம்மை மீட்டெடுக்கவும், வெற்றிபெறவும் உதவுகிறது" எனத் தெரிவித்துள்ளார். 


துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி சேகரிக்கவும் நிவாரணம் வழங்கவும் பாகிஸ்தான் அரசு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது. இதனை  துருக்கி  அரசின் ஊடக நிறுவனமான அனடோலி ஏஜென்சி தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், துருக்கியின் "சகோதரி மற்றும் சகோதரர்களுக்கு" மேலும் 2  நிவாரணப் பொருட்கள் பறந்து வருவதாக ட்விட்டரில் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. பெயரைக் கூட தெரிவிக்காமல் உதவிக்கரம் நீட்டிய மனிதநேயம் மிக்க மனிதருக்கு வாழ்த்துகளும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றனர். நெட்டிசன்கள் இதனை பதிவிட்டு அவரை கொண்டாடி தீர்க்கின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க