நெகிழ்ச்சி வீடியோ!! மணப்பெண்ணை பிரிய மறுத்து கண்ணீர் விட்டு கதறி அழுத நாய்!!

 

வீட்டில் என்ன தான் செல்லப்பிராணிகள் வளர்த்தாலும் அவைகளில் நாய் தான் நன்றியும், விசுவாசமும் உடையது. எங்கே சென்றாலும் கூடவே செல்வது மட்டுமல்ல. வளர்த்தவர்களுக்கு ஆபத்து என்றால் நாய் தான் முதலில் நின்று எஜமானரை காக்கும். அதன் பாசத்திற்கும், நன்றிக்கும் அளவே கிடையாது. நாயை போல் நன்றியுடைவனாக இரு என்ற பழமொழி அதனால் தான் வந்தது.  வீட்டுக்குள் ஏதேனும் விலங்குகளோ, பாம்புகளோ புகுந்தால் அவற்றை விரட்டியடித்து சில நேரங்களில் தன் உயிரை கொடுத்து எஜமான் குடும்பத்தை காக்கும்.  அதே போல் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்துள்ளது.  

மேலும் அந்த நாயின் நடவடிக்கைகள் "என்னை விட்டு பிரிய போகிறாயா?"என்கின்ற தொனியில் இருந்தது. சுகப்பிரியாவும் மிகவும் பாசத்துடன் வளர்ப்பு நாயை சமாதானப்படுத்தினார். நான் அடிக்கடி நமது வீட்டுக்கு வருவேன், உன்னை பார்க்க கண்டிப்பாக வருவேன் என கண்கலங்கியபடி நாயை கட்டியணைத்து ஆறுதல் கூறினார். சமாதானம் ஆகாத நாய் அவரது சேலையை பிடித்து இழுத்து கண்ணீர்விட்டது. இந்த நெகிழ்ச்சி சம்பவம் இந்த பாசப்போராட்டம், அங்கு திரண்டிருந்த உறவினர்களையும் கண் கலங்க வைத்தது. மணப்பெண்ணின் உறவினர்கள் கூறுகையில், "கல்லூரி மற்றும் வெளியிடங்களுக்கு சுகப்பிரியா சென்றுவிட்டால் அவர் வரும் வரை நாய்  காத்திருக்கும். அவரது இருசக்கர வாகனத்தின் சத்தம் கேட்டதும் கட்டி வைக்கப்பட்ட நிலையிலும் நாய் அங்கும் இங்கும் ஓடி தனது வாலை ஆட்டி பாசத்தை வெளிப்படுத்தும்" எனத் தெரிவித்தனர். இந்த  நாய்க்கும், மணப்பெண்ணுக்கும் இடையே நடந்த பாசப்போராட்டத்தை வீடியோவாக படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க