எகிறும் எதிர்பார்ப்பு.. என்ன பேசப் போகிறார் விஜய்... இன்று முதல் சூராவளி பிரச்சாரம் ஆரம்பம்!

 

தவெக கட்சித் தலைவர் விஜய், பெரம்பூரில் போட்டியிடப் போவதாகத் தகவல்கள் வெளியாகி கொண்டிருந்த நிலையில், இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக இன்று தனது பிரச்சாரத்தை பெரம்பூர் தொகுதியில் இருந்தே தொடங்குகிறார் விஜய்.

பெரம்பூர் பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் இப்போதே விழாக்கோலம் பூண்டுள்ளன. தனது கட்சியின் கொள்கைகளையும், எதிர்காலத் திட்டங்களையும் மக்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்க்க அவர் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இன்று நடைபெறவுள்ள இந்தப் பிரச்சாரப் பயணத்திற்காகப் பெரம்பூர் தொகுதியில் உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தீவிரமான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் பெண் வாக்காளர்களைக் கவரும் வகையில் பல்வேறு சிறப்புச் சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே அந்தப் பகுதியில் கட்சி சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் பணிமனைகள் அனைத்தும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியுள்ளன. திராவிடக் கட்சிகளின் கோட்டையாகக் கருதப்படும் வடசென்னையில், விஜய்யின் இந்தப் புதிய அரசியல் பிரவேசம் எந்த மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதை அறிய ஒட்டுமொத்தத் தமிழகமுமே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.

இன்று தொடங்கும் பிரச்சாரத்தின் போது, தொகுதி மக்களின் நீண்ட காலப் பிரச்சினைகள் குறித்து விஜய் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மற்ற கட்சிகளில் இருந்து விலகி மாற்றுத் திறனாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் அவரது முன்னிலையில் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பினால் பெரம்பூர் தொகுதி முழுவதும் இப்போதே ஒரு விதமான தேர்தல் திருவிழா உற்சாகம் தொற்றிக் கொண்டுள்ளது. இந்த முதல் கட்டப் பிரச்சாரத்தின் வெற்றி தான், தமிழகத்தின் மற்ற தொகுதிகளிலும் விஜய்யின் அரசியல் செல்வாக்கை நிர்ணயிக்கும் ஒரு முக்கியக் காரணியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!