தலைநகரில் இரட்டை கொலை - பரபரப்பு சம்பவம்!
சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகர் பகுதியில் வசித்து வருபவர் சரித்திர பதிவேடு குற்றவாளி அருண். அவரது நண்பர் சுரேஷ் என்ற படப்பை சுரேஷ் ஆகியோர் இன்று கோட்டூர்புரம் நாகவல்லி அம்மன் கோயில் முன்பு மது போதையில் படுத்து இருந்தனர். அப்போது சுமார் 10 மணிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று, படுத்திருந்த அருண் மற்றும் சுரேஷ் ஆகியோரை அரிவாள் மற்றும் கத்தியை கொண்டு சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இதில் படப்பை சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அருண் படுகாயம் அடைந்து ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இச்சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில் 2022ம் ஆண்டு அருண் என்பவரது காதலி சாயின்ஷாவை ரவுடி சுக்கு காபி சுரேஷ் படுகொலை செய்துள்ளார். இதனால் காதலியின் கொலைக்கு பழிவாங்க அருண் சுக்கு காபி சுரேஷை கொலை செய்ய திட்டமிட்டு இருந்தார்.
இந்நிலையில், இன்று சுக்கு காபி சுரேஷ் முந்திக்கொண்டு அருண்குமார் மற்றும் அவரது அண்ணன் அர்ஜுனன் ஆகியோரை கொலை செய்ய வந்தனர். படுத்திருந்ததால் அர்ஜுனனுக்கு பதிலாக அருணுடன் சேர்த்து படப்பை சுரேஷையும் கும்பல் வெட்டி படுகொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. கோட்டூர்புரம் போலீசார் இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு தலைமறைவாக உள்ள கோட்டூர்புரத்தை சேர்ந்த சுரேஷ் என்ற சுக்கு காபி உட்பட எட்டு நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். கோட்டூர்புரத்தில் நடந்த இரட்டை கொலை சம்பவம் சென்னை முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!