ரஷியா–உக்ரைன் போர் முடிக்க ஜூன் வரை அமெரிக்கா காலக்கெடு…!
ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே கடந்த 4 ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும் நிலையில், இந்த போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக அமெரிக்கா ஜூன் மாதம் வரை காலக்கெடு வழங்கியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அந்த காலக்கெடுக்குள் அமைதி உடன்பாடு எட்டப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார். இல்லையெனில் இரு நாடுகளுக்கும் அமெரிக்கா கூடுதல் அழுத்தம் தரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த போரை நிறுத்த உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக, அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுக்க அமெரிக்கா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. போர் நீடிப்பதால் உலக பொருளாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பல நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
போரைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதித்திருந்தார். இந்தியாவுக்கும் இந்த வரி விதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தியா ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்காது என்று கூறியதை தொடர்ந்து அந்த வரி 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!