இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... காரைக்கால் கலெக்டர் அறிவிப்பு!
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை 15-17 திகதிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடந்த 14-ந்தேதி முதல் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. மக்கள் மாட்டுப்பொங்கல், பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர். குடும்பத்துடன் திரையரங்குகள், கடற்கரை போன்ற இடங்களில் பொங்கல் விடுமுறையை அனுபவித்தனர்.
பல ஊர்களில் குழந்தைகள், பெண்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அவனியாபுரம், அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டியும் நடைபெற்றது.
இதற்கிடையே காரைக்கால் மாவட்டத்தில் புதுச்சேரி அரசு சார்பில் கடந்த 3 நாட்களாக மலர் கண்காட்சி மற்றும் கார்னிவல் விழா நடைபெற்று வருகிறது. கார்னிவல் விழா நிறைவு தினத்தை முன்னிட்டு, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் இன்று (19.01.26) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!