சீரியல் நடிகைகள் குடுமிப்புடி சண்டை... ஷூட்டிங் ஸ்பாட்ல அடித்துக் கொண்டதால் பரபரப்பு!

 


ஷூட்டிங் ஸ்பாட்டில் சின்னத்திரை நடிகைகள் ஒருவர் தலைமுடியை இன்னொருவர் பிடித்துக் கொண்டு அடித்துக் கொண்டதால் திடீர் பரபரப்பு உருவானது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியலில் கதாநாயகனின் அம்மாவாக டிக்டாக் பிரபலம் சசி லயா நடித்து வருகிறார். இவர் செல்வராகவனின் ‘பரகாசூரன்’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். இவரது வீடியோக்கள் சமூகவலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்தும்.

அதே போன்று இப்போது ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியலிலும்  தகராறு செய்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.‘மீனாட்சி பொண்ணுங்க’ ஷூட்டிங் ஸ்பாட்டில், அதே சீரியலில் நடித்து வரும் நடிகை ஆர்த்தி ராவின் இருக்கையில் அமர்ந்துள்ளார் சசி லயா. ஷாட் முடித்து விட்டு, வந்த ஆர்த்தி, அந்த இருக்கையில் அமர்வதற்காக  கேட்ட போதும் கூட, அதை கேட்காதப்படி அமர்ந்திருக்கிறார் சசி லயா.

இவரின் செய்கையால் கடுப்பான ஆர்த்தி ராவ், சசி லயாவை அடித்து விட்டார். பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டும், தகாத வார்த்தைகளால் பேசி சண்டையிட்டும் கொண்டனர். இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட இந்த சண்டையை இயக்குநர் தான் சமாதானம் செய்து வைத்துள்ளார். இதனால், சீரியல் படப்பிடிப்பு தளத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!