undefined

சரத் பவார் மருத்துவமனையில் திடீர் அனுமதி - தற்போதைய நிலை என்ன?

 

நேற்று பிப்.22 காலை திடீர் உடல்நலக் குறைவு காரணமாக 85 வயதான சரத் பவார், புனேயில் உள்ள ரூபி ஹால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லேசான நீர்ச்சத்து குறைபாடு மற்றும் சோர்வு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தற்போது நரம்பு வழி திரவங்கள் செலுத்தப்பட்டு வருகின்றன.

அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், அச்சப்படத் தேவையில்லை என்றும் மருத்துவமனைத் தலைவர் டாக்டர் பர்வேஸ் கிராண்ட் தெரிவித்துள்ளார். இரத்தப் பரிசோதனை மற்றும் சிடி ஸ்கேன் முடிவுகள் இயல்பாக உள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு நாட்கள் அவர் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார். அதன் பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரத் பவார் ஏற்கனவே கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி மார்புச் சளி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிப்ரவரி 14-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். முழுமையாகக் குணமடையாத நிலையில் அவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே, தனது தந்தை வழக்கமான பரிசோதனை மற்றும் நீர்ச்சத்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா அரசியல் களத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் சரத் பவாரின் உடல்நிலை குறித்துப் பல்வேறு அரசியல் தலைவர்கள் விசாரித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!