அதிர்ச்சி!! ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம்!! 

 

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சுவாசப்பிரச்சனை ஏற்பட்டதால் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தொண்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு மாவட்ட சட்ட மன்ற இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியில்   ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றார். ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா உயிரிழந்ததையடுத்து அந்த சட்டமன்ற தொகுதி காலியானது. இந்த தொகுதிக்கு  பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.  ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு  மார்ச்  15ம் தேதி இரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.


உடனடியாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை நிர்வாகம் இதய பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்திருந்தது.  அதே சமயத்தில் அவருக்கு லேசான கொரோனா தொற்று இருப்பதாகவும்  உறுதி செய்யப்பட்டது. அத்துடன் இதயத்தில் ரத்த நாளங்கள் சுருங்கியிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் அவரால் இயல்பாக சுவாசிக்க முடியவில்லை.  ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை சமநிலைப்படுத்த செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இளங்கோவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!