புதைக்கப்பட்ட மாணவியின் உடல் மீண்டும் தோண்டி எடுத்ததால் அதிர்ச்சி... திருப்பூரில் பரபரப்பு!

 

திருப்பூரில் தற்கொலைச் செய்து கொண்டதாக கூறப்பட்ட மாணவியின் உடல், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படாமலேயே புதைக்கப்பட்டதால், தகவலறிந்து கிராம  நிர்வாக அதிகாரி, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், போலீசார், மாணவியின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து, உடல் கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாணவியின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் கணியூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் முத்துமாரி (14). அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் முத்துமாரி 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 13ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்துமாரி, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை சுடுகாட்டில் அடக்கம் செய்துள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்த கிராம நிர்வாக அதிகாரி ஆறுமுகம் கணியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து நேற்று மடத்துக்குளம் தாசில்தார் செல்வி, இன்ஸ்பெக்டர் பாலமுருகன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, வருவாய் ஆய்வாளர் சந்திரசேகர், கிராம நிர்வாக அதிகாரி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் மாணவியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. 

பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் உடல் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!