அதிர்ச்சி வீடியோ... பழங்குடியினச் சிறுவனை மரத்தில் கட்டி வைத்து, அந்தரங்க பகுதியில் சிவப்பு எறும்புகளை கடிக்க விட்ட கொடூரம்!
இச்சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் நடந்திருந்தாலும், அந்தச் சிறுவன் ஒரு மரத்தில் கட்டி வைத்து அடிக்கும் வீடியோ செவ்வாய்க்கிழமை சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவில் சிறுவனை மரத்தில் கட்டி பல பேர் தாக்குகின்றனர். விஷயம் என்னவென்றால், சிறுவனின் தனிப்பட்ட பகுதிகளில் சிவப்புப் எறும்பு வைக்கப்பட்டதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலாளர்கள் அதே பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதாக தெரிகிறது. இச்சம்பவம் பொதுமக்களிடையே மேலும் கோபத்தையும் கண்டனத்தையும் தூண்டியுள்ளது.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா பிரசாந்த் சன்னகிரி காவல்துறைக்கு முழுமையான விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!