ராணிப்பேட்டை உட்பட 9 மாவட்டங்களில் பனிப்பொழிவு!
தமிழகத்தில் பிப்ரவரி 8 முதல் 12-ஆம் தேதி வரை இயல்பைவிட அதிக வெப்பநிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பிப்ரவரி 11 வரை வட வானிலை நிலவும் என கூறப்பட்டுள்ளது.
நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரங்களில் மிதமான பனிப்பொழிவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பகல் நேரங்களில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மிதமான பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!