சிம்லாவில் கடும் பனிப்புயல் எச்சரிக்கை… 8 மாவட்டங்களில் ரெட் அலெர்ட்!
இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லா உட்பட மாநிலத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களுக்கு மிதமான பனிப்பொழிவு முதல் கடும் பனிப்புயல் வரை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சம்பா, காங்க்ரா, கின்னௌர், குலு, லாஹுல்–ஸ்பிதி, மண்டி, சிம்லா மற்றும் சிர்மௌர் பகுதிகளில் அடுத்த 6 மணி நேரம் இடைவிடாத பனிப்பொழிவு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் தீவிர பனிப்புயல் வீசவும் வாய்ப்பு உள்ளது.
ஊனா, பிலாஸ்பூர் மற்றும் ஹமீர்பூர் மாவட்டங்களில் பல இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்யக்கூடும். மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், இடியுடன் கூடிய மழையும் பெய்யலாம். காங்க்ரா, சோலன் மற்றும் சிர்மௌர் மாவட்டங்களிலும் மழை மற்றும் பனிப்பொழிவு தீவிரமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
உயரமான மலைப் பகுதிகளான கின்னௌர் மற்றும் லாஹுல்–ஸ்பிதியில் கடும் பனிப்பொழிவு தொடரும் என்றும், மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் மின்சாரம், குடிநீர் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பனி படர்வதால் விபத்துகள் ஏற்படலாம் என்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!