இன்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்.. பெயர் சேர்க்க மிஸ் பண்ணாதீங்க! என்னென்ன தேவை?!
இன்று சென்னையில் அனைத்து வாக்குசாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், டிசம்பர் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் சேர்க்கை, திருத்தம் மற்றும் மறுப்பு தொடர்பான விண்ணப்பங்களை ஜனவரி 18 வரை அளிக்கலாம். பெயர் சேர்க்க விரும்புவோர் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து, அதனுடன் உறுதிமொழி படிவத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இதில் 2002, 2005 பட்டியல்களில் இடம்பெற்ற பெயர் அல்லது பெற்றோர் விவரங்களை குறிப்பிட வேண்டும். தகவல்கள் சரியில்லையெனில் அதற்கான ஆவணங்களை வழங்க வேண்டும்; இதில் ஆதார் ஏற்றுக்கொள்ளப்படாது.
படிவம் 6 மற்றும் படிவம் 8 ஆகியவை வாக்குச்சாவடி நிலை அலுவலர் அலுவலகங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் பெறலாம். மேலும் ECINET செயலி மற்றும் voters.eci.gov.in இணையதளம் மூலமாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று டிசம்பர் 21ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!