நாளை நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!
பயணிகளின் வசதிக்காக, நாகர்கோவில், திருவனந்தபுரம் மற்றும் கோவையில் இருந்து சென்னைக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
சிறப்பு ரயில்களின் விவரங்கள்: 1. நாகர்கோவில் - தாம்பரம் இடையே (வண்டி எண் 06012/06011)
நாகர்கோவில் புறப்பாடு (06012): நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.15 மணிக்குத் தாம்பரத்தைச் சென்றடைகிறது.
தாம்பரம் புறப்பாடு (06011): நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மதியம் 3.30 மணிக்குத் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 4.15 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடைகிறது.
2. திருவனந்தபுரம் வடக்கு - சென்னை எழும்பூர் இடையே (வண்டி எண் 06108/06107)
திருவனந்தபுரம் வடக்கு புறப்பாடு (06108): நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.45 மணிக்குத் திருவனந்தபுரம் வடக்கில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.20 மணிக்குச் சென்னை எழும்பூரை வந்தடைகிறது.
சென்னை எழும்பூர் புறப்பாடு (06107): நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மதியம் 1.50 மணிக்குச் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்குத் திருவனந்தபுரம் வடக்கைச் சென்றடைகிறது.
3. கோவை - எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் இடையே (வண்டி எண் 06024/06023)
கோவை புறப்பாடு (06024): நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.30 மணிக்குக் கோவையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9.20 மணிக்கு எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் நிலையத்தை வந்தடைகிறது.எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் புறப்பாடு (06023): நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பகல் 12.20 மணிக்குச் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, அதே நாள் இரவு 10.30 மணிக்குக் கோவையைச் சென்றடைகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!