undefined

வாக்காளர் சிறப்பு முகாம் நிறைவு... சென்னையில் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்... பெரும்பாலன இடங்களில் யாரும் வரவில்லை!

 

சென்னையில் 14 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், நேற்று நடந்த சிறப்பு முகாமில், சென்னை மக்கள் பெரும் அளவில் கண்டுக்கொள்ளவில்லை.

பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கவும், புதிய வாக்காளர்களைச் சேர்க்கவும் சென்னை மாநகராட்சி சார்பில் சனிக்கிழமை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. வார்டு அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 3,718 இடங்களில் இந்த முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு மையத்திலும் தேர்தல் உதவி அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு, படிவங்களை வழங்கத் தயாராக இருந்தனர். ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாகப் பொதுமக்கள் இந்த முகாம்களில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. இது மாநகராட்சி அதிகாரிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பு முகாம்கள் நடைபெற்ற பல இடங்களில் ஒரு மையத்திற்குச் சராசரியாக 25 பேர் மட்டுமே வந்து சென்றதாக அலுவலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். வாக்காளர் பட்டியலில் இருந்து இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் போதிய அளவு சென்றடையவில்லை என்பதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. வழக்கமாக இத்தகைய பணிகளில் ஆர்வம் காட்டும் அரசியல் கட்சியினரும் கூட, இம்முறை புதிய வாக்காளர் சேர்க்கையில் போதிய அக்கறை காட்டவில்லை என்பது கள நிலவரமாக உள்ளது.

முகாம்கள் நடைபெற்ற இடங்களில் வைக்கப்பட்டிருந்த வரைவு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இருக்கிறதா என்பதைச் சரிபார்க்கக் கூட மிகக் குறைந்த அளவிலான மக்களே வந்திருந்தனர். சனிக்கிழமை முகாம்கள் மந்தமாக முடிந்த நிலையில், இரண்டாவது நாளாக நேற்றும் சென்னை முழுவதும் நடைபெற்ற இந்தச் சிறப்பு முகாம்களில் வாக்காளர்கள் அதிகளவில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!