சென்னையில் இன்றிரவு முதல் மழை தொடங்கும்.. வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்!
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இன்றிரவு முதல் மழை தொடங்கும் என்று தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
இது தொடர்பாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில், “காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவிழப்பதால், கடலோரப் பகுதிகளைத் தவிர உள் தமிழகம், மேற்கு மற்றும் தென் தமிழகத்தில் மழையை எதிர்பார்க்கலாம்.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை டெல்டா பகுதிக்கு அருகில் உள்ளதை நம்மால் பார்க்க முடிகிறது. புதுச்சேரி - கடலூர் - மயிலாடுதுறை பகுதிகளில் காற்று மொத்தமாகக் குவிந்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் மிக கனமழை பெய்தது. காற்றின் குவிதல் கடலோரப் பகுதிகளைக் கடந்து, உள் தமிழகத்துக்கு இடம் பெயர்ந்துள்ளது
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மிகவும் வலுவடைந்து, நிலப்பகுதிக்குள் நெருக்கமாக நகர்வதால், இன்று(நவ. 13) தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மீண்டும் இன்றிரவு முதல் ஓரிரு இடங்களில் மழை பெய்யத் தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!