பங்குச்சந்தை கடும் சரிவு... கதறும் முதலீட்டாளர்கள்... 2 நாளில் ரூ.10 லட்சம் கோடி இழப்பு!
இந்திய பங்குச்சந்தையில் பங்குகள் விலை நேற்று வீழ்ச்சியை சந்தித்த நிலையில், இன்றும் தொடர்ந்து குறைந்து வருவதால் சென்செக்ஸ், நிஃப்டி கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த இரு நாட்களில் மட்டும் சுமார் ரூ.10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 701 புள்ளிகள் சரிந்து 77,992 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 242 புள்ளிகள் சரிந்து 23,640 புள்ளிகளுக்கு சென்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 46 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து விற்பனையாகிறது. பங்குகள் விலை சந்தையில் தொடர்ந்து சரிந்து வருவதால் முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று சென்செக்ஸ் 820 புள்ளிகள் சரிந்து 78,675 புள்ளிகளானது. இன்று சென்செக்ஸ் மேலும் 700 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்து 77,991 புள்ளிகளாக குறைந்தது.
இந்த இரு நாட்களில் சென்செக்ஸ் 1,500 புள்ளிகளுக்கு மேல் சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. 1,000 கோடிக்கு மேல் உள்ள 900 க்கும் மேற்பட்ட பங்குகள் அவற்றின் சந்தை மூலதனத்தை விட 20% குறைந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியளித்தது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!