சுசீந்திரம் தேரோட்டம்.. குமரி மாவட்டத்திற்கு ஜன.2ல் உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் உத்தரவு!
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் புகழ்பெற்ற அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் மார்கழித் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு, வரும் ஜனவரி 2, 2026 அன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் தேரோட்டம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால், பொதுமக்களின் வசதிக்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறை அவசரக் காலப் பணிகள் மற்றும் வங்கிப் பணிகளுக்குப் பொருந்தாது. முக்கியத் தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருந்தால், அவை வழக்கம் போல நடைபெறும்.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், அதே மாதம் ஜனவரி 10-ம் தேதி (சனிக்கிழமை) அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாணுமாலைய சுவாமி கோயிலில் மார்கழித் திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஜனவரி 2-ம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலையில் சுவாமிக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, பெரிய தேர் உட்பட மூன்று தேர்களும் வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!