அதிர்ச்சி வீடியோ!! சென்னை ரயிலில் திடீர் புகை!! அலறி அடித்து இறங்கி ஓடிய பயணிகள் !! 

 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, ஆந்திரா மாநிலம் குப்பம் வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு குளிர் சாதன வசதி கொண்ட டபுள் டக்கர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 14 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் வழக்கம் போல் இன்று காலை வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே செல்லும் போது திடீரென புகை வெளியேறியது. குபு குபுவென புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சியில் பயணிகள் உறைந்தனர்.உடனே ரயில்வே அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்படவே ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.


தண்டவாளத்தில் இருந்த சாக்குப்பை ஒன்று ரயிலின் சக்கரத்தில் பிரேக் பகுதியில் சிக்கிக்கொண்டதால் ஏற்பட்ட தேய்மானத்தின் காரணமாகவே புகை வந்ததாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது. இது போன்று தொடர்ச்சியாக சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால் ரயில்வே நிர்வாகம் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்