undefined

சட்டென்று மாறுது வானிலை ... மலைப்பகுதிகளில் உறைபனி! 

 

 

கேரள கடலோரத்துக்கு அப்பாலான தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதேபோல் தென்கிழக்கு வங்கக்கடல், தெற்கு கடலோர ஆந்திராவை ஒட்டிய பகுதிகளில் கீழடுக்கு சுழற்சியும் உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழக வானிலையில் மாற்றங்கள் ஏற்படலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற தமிழக பகுதிகள் மற்றும் புதுவையில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படலாம்.

நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் டிசம்பர் 29, 30 தேதிகளில் உறைபனி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 28 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரைவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 முதல் 22 டிகிரி செல்சியஸ் வரைவும் இருக்கும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!