அமைச்சர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் அனுமதி...முதல்வர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்!
அமைச்சர் துரைமுருகன் இன்று காலை சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தொண்டர்களை பதற்றமடைய செய்துள்ளது.
மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து துரைமுருகன் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலத்தை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைமுருகனை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதையடுத்து துரைமுருகன் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!