தை அமாவாசை.. ராமேஸ்வரத்திற்கு சென்னை, பெங்களூரு, கோவையிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை தினத்தன்று ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்குத் திதி கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு நாளை தை அமாவாசை வருவதால், பயணிகளின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் கூடுதல் பேருந்துகளை இயக்குகிறது.
இன்று (சனிக்கிழமை) சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையம், சேலம், கோவை மற்றும் அண்டை மாநிலமான பெங்களூரு ஆகிய முக்கிய இடங்களிலிருந்து ராமேசுவரத்திற்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) ராமேசுவரத்தில் வழிபாடுகளை முடித்துவிட்டுத் திரும்பும் பக்தர்களுக்காக, அங்கிருந்து மீண்டும் சென்னை, சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்குக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், தங்களது பயணத்தை உறுதி செய்யவும் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnstc.in அல்லது TNSTC மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!