வீட்டிற்கு வேலைக்கு வந்த சிறுமியிடம் சில்மிஷம்.. முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்..!!

 

வீட்டிற்கு வேலை செய்ய வந்த சிறுமியை அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...

கரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் வசிப்பவர் மேகநாதன் (வயது 63). இவரது மனைவி பாப்பாத்தி மின்சாரம் தாக்கி படுத்த படுக்கையாக உள்ளார். இவர் கடந்த 4 ஆண்டுகளாக தனது வீட்டில் வாடகைக்கு வசித்து வரும் சிறுமியை வீட்டு வேலை செய்ய அடிக்கடி அழைத்துள்ளார். மேகநாதனுக்கு வயதாகிவிட்டதால், சிறுமியின் தாய் வீட்டு வேலை செய்ய அனுப்புகிறார்.

இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டில் வேலைக்கு வந்த சிறுமியை மேகநாதன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது சிறுமி சத்தம் போட்டுள்ளார்.  வெளியே சொன்னால் அம்மா மகள் இருவரையும் கொன்று விடுவதாக முதியவர் மிரட்டியுள்ளார். இதையடுத்து சிறுமியின் குடும்பத்தினர் வீட்டை காலி செய்துவிட்டு வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்தனர். இந்நிலையில் பள்ளிக்கு செல்லும் சிறுமியை தடுத்து நிறுத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதையடுத்து (21.06.2022) கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேகநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக முதியவருக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். கொலை மிரட்டல் குற்றம். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி நசீமா பானு உத்தரவிட்டார்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!