விஜயகாந்த் இறுதி சடங்கை பார்த்த தொண்டருக்கு நேர்ந்த சோகம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

 

விஜய்காந்த்தின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நிகழ்வை பார்த்து கொண்டிருந்த கட்சி தொண்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 28ம் தேதி காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் நேற்று முன் தினம் அடக்கம் செய்யப்பட்டது. அவரது மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள், பல்வேறு கட்சியினர், ரசிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தேமுதிக கிளை செயலாளர் விஜயகுமார் (வயது 41) சென்னை சென்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சொந்த ஊருக்கு திரும்பினார். விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தை விஜயகுமார் வீட்டில் இருந்து டிவியில் பார்த்தார்.விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தை டிவியில் பார்த்து அழுது கொண்டிருந்த விஜயகுமார் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விஜயகுமாரை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

 அங்கு விஜயகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைவர் விஜயகாந்தின் மரணத்தை ஏற்க முடியாமல், மாரடைப்பால் விஜயகுமார் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!