நெருங்கும் தேர்தல்... இன்று முதல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி ஆரம்பம்!
இன்று முதல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சிகள் ஆரம்பமாகின்றன. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி நெருங்கும் நிலையில், தேர்தல் பணிகளைத் தொய்வின்றி நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணிபுரிய இருக்கும் அரசு அலுவலர்களுக்கான முதற்கட்டப் பயிற்சி வகுப்புகள் இன்று நடைபெறவுள்ளது.
சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் அமைக்கப்படவுள்ள ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் தலைமை அலுவலர்கள் மற்றும் பிற பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் (EVM) கையாளுதல், VVPAT கருவிகளின் பயன்பாடு, மாதிரி வாக்குப்பதிவு நடத்துதல் மற்றும் தேர்தல் நாளன்று கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து இந்தப் பயிற்சியில் விரிவாக விளக்கப்படவுள்ளது.
சென்னையில் உள்ள முக்கியக் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் இந்தப் பயிற்சிகள் நடைபெற உள்ளன. "தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் எவ்விதத் தவறும் இன்றிப் பணியாற்ற வேண்டும் என்பதே இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கம்" எனத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று தொடங்கும் இந்தப் பயிற்சி, அடுத்தடுத்த கட்டங்களாகத் தேர்தல் தேதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் பங்கேற்கத் தவறும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!