அடக் கன்றாவியே... ஓடும் ரயிலில் நள்ளிரவில் பெண் பயணியின் மீது டிடிஆர் செஞ்ச வேலை... அதிர்ந்த ரயில்வே!

 

அண்மைக்காலமாக ஓடும் ரயிலில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ரயிலில் முன்பதிவு பெட்டியில் ஏறி பயணம் செய்யும் வடமாநிலத்தவர்கள், டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல், பெண்ணுக்கு பாலியல் தொல்லை போன்ற செயல்கள் நடக்கிறது. இந்நிலையில் பெண் பயணியின் மீது டிக்கெட் பரிசோதகர் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அகல் தக்த் எக்ஸ்பிரஸ் ரயில் லக்னோவில் இருந்து கொல்கத்தா நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. இரவில் பயணிகள் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவர் சிறுநீர் கழித்ததும் விழித்துப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அந்தப் பெண் கத்திக் கூச்சல் போட்டதும் ரயிலில் இருந்த மற்ற பயணிகளும் வந்து சிறுநீர் கழித்த நபருக்கு அடித்துஉமைத்தனர். 

பின்னர் தான் தெரிந்தது சிறுநீர் கழித்தது டிக்கெட் பரிசோதகர் என்று. பாதிக்கப்பட்ட பெண் தன் கணவருடன் அமிர்தசரசில் இருந்து கொல்கத்தா சென்றுகொண்டிருந்தார். சம்பவம் நடந்தவுடன் பெண்ணின் கணவர் ராஜேஷ், ரயில்வே காவல் துறையில் புகார் கொடுத்தார். ரயில்வே காவல் அதிகாரி விசாரணை மேற்கொண்டார். அதன்பேரில், பயணி மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர் முன்னா குமார். அவரை சார்பாக் ரயில் நிலையத்தில் கைது செய்திருக்கிறோம், என அவர் கூறுகிறார். டிக்கெட் பரிசோதகர் முன்னா குமாரிடம் நடந்திய விசாரணையில் அவர் குடிபோதையில் பயணியின் மீது சிறுநீர் கழித்தாகத் தெரிய வந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!