நண்பர்களிடம் சிரித்து பேசிய கல்லூரி மாணவர்.  அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை!

 

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் அரசு மருத்துவக் கல்லூரியில் வெளிமாநில மாணவர்களும் ஏராளமானோர் மருத்துவம் படித்து வருகின்றனர். மருத்துவக் கல்லூரியில் மாணவர் விடுதியும் செயல்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், விடுதியில் இறுதி ஆண்டு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. 

22 வயதான தசரி ஹர்ஷா என்ற மாணவர், இரவு நண்பர்களுடன் அமர்ந்து சிரித்துப் பேசியுள்ளார். பின்னர் உறங்குவதற்காக அவர் தனது அறைக்குச் சென்றுள்ளார். மாணவர் ஹர்ஷா காலையில் நீண்ட நேரம் அறையை திறக்கவில்லை. அவரது நண்பர்கள் சென்று பார்த்தபோது அவர் தற்கொலை செய்திருப்பது தெரிந்தது. 

இதனைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மாணவரின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த மாணவர் ஹர்ஷா சிந்தகுடா பகுதியை சேர்ந்தவராவார்.

அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. எனினும் அவருக்கு குணமடையாத வகையில் உடல்நல பாதிப்பு உள்ளதாகவும் அதனால் மனஉளைச்சலில் தற்கொலை செய்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் விடுதிக்கு சில நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?