கொடூரத்தின் உச்சம்.. மிட்டாய் வாங்க சென்ற சிறுவன்... மதுபாட்டிலால் குத்திக்கொன்ற போதை கும்பல்!

 

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அருகில் உள்ள இந்திரா நகரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரோஹித் ராஜ் (14). சிறுவன் ரோஹித் ராஜ் அங்குள்ள பெட்டி கடை ஒன்றுக்கு மிட்டாய் வாங்க சென்றிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் சீனிவாசன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் அங்கு மதுபோதையில் வந்துள்ளனர்.

அப்போது ரோஹித் ராஜை அவர்கள் அங்குள்ள அங்காளம்மன் கோவில் செல்லும் சாலையில் உள்ள பொதுக் கழிப்பிடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், மதுபாட்டிலை உடைத்து சிறுவனின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.

சிறுவன் அங்கிருந்து ரத்த காயங்களுடன் வெளியே வந்து நடுரோட்டில் விழுந்து துடி துடித்து இறந்துள்ளான். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும்  அவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று, சாலையில் கிடந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் சிறுவனை கொலை செய்து தப்பியோடிய சீனிவாசன் மற்றும் அவனது நண்பர்களை தேடி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், 20 வயது இளைஞரான சீனிவாசன் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு அடிமையானவர். கொலை நடந்த போது சீனிவாசன் மற்றும் அவனது நண்பர்கள் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷியாம்ளா தேவி. கொலை நடந்தது குறித்து கேட்டறிந்தார். சிறுவனை இளைஞர்கள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!