களத்தில் இறங்கிய தமிழக அரசு ... கல்வி நிதியை விடுவிக்க மத்திய அரசுக்கு எதிராக  உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

 

இந்தியா முழுவதும் மத்திய அரசு புதிய கல்விகொள்கையை அமல்படுத்தியுள்ளது.  இந்த கல்விக்கொள்கையை கட்டாயம் அனைத்து மாநிலங்களும் ஏற்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில்  பாஜக  மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் புதிய கல்விக்கொள்கை செயல்படுத்தப்பட்டு வருகிறது.  தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்க மறுத்து வருகின்றன. 

இதனால் தமிழகத்திற்கு தர வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், தமிழகத்திற்கு தர வேண்டிய கல்வி நிதியை நிறுத்தி வைத்துள்ள மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்வி நிதியை விடுவிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.  புதிய கல்வி கொள்கை, சமக்ரா சிக்ஷா திட்டத்துக்கான நிலுவை நிதி வழங்கப்படவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சமக்ரா திட்டத்துக்கான நிதியை 6% வட்டியுடன் 2,291 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது