தொடரும் சோகம்... நடுவானில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதல்... 2 பேர் பலி!
அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் மரானா பகுதியில் விமான நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து இன்று காலை 8.28 மணியளவில் புறப்பட்டு சென்ற செஸ்னா 172எஸ் என்ற விமானமும், லன்கெய்ர் 360 எம்.கே. 2 விமானமும் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதின.
இந்த கோர விமான விபத்தில் இருந்த தலா ஒருவர் என மொத்தம் 2 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக விமான நிலையம் மூடப்பட்டு உள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரை சமீப காலமாக விமான விபத்து சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. 2025 ஜனவரி மாதம் 29ம் தேதி, வர்த்தக ஜெட் விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் மோதி கொண்டதில் 67 பேர் உயிரிழந்தனர்.
ஜனவரி 31ம் தேதி பிலடெல்பியாவில் மருந்து பொருட்களை ஏற்றி சென்ற விமானம் விபத்தில் சிக்கியதில் அதில் இருந்த 6 பேரும் கொல்லப்பட்டனர். தரையில் இருந்த ஒருவரும் உயிரிழந்து உள்ளார். பிப்ரவரி முதல் வாரத்தில், மேற்கு அலாஸ்காவில் சிறிய ரக விமானம் ஒன்று நோமி பகுதியில் விபத்தில் சிக்கியதில் அதில் இருந்த 10 பேரும் பலியானார்கள். கடந்த 2 வாரங்களில் இதுபோன்ற பெரும் விபத்துகளை அமெரிக்க விமான போக்குவரத்து துறை எதிர்கொண்டுள்ளது.
இதுகுறித்து துறை ரீதியிலான விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2 சிறிய ரக விமானங்கள் நடுவானில் மோதி விபத்தில் சிக்கியதில் 2 பேர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!