அதிர்ச்சி... கல்லூரி மாணவி திடீர் தற்கொலை! தமிழகத்தில் தொடரும் சோகம்!

 

வீட்டில் கல்லூரி மாணவி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உப்புவாணியமுத்தூரை சேர்ந்த இளம்பெண் ஆனந்தி (20). இவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவா் விடுதியில் தங்கியிருந்து கல்லூரியில் பயின்று வந்தார். இந்நிலையில் விடுமுறைக்காக ஊருக்கு வந்த அவா், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

வீரவநல்லூா் போலீசா அவரது சடலத்தைக் கைப்பற்றி, வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதில், குடும்பப் பிரச்சனையில் ஆனந்தி இந்த முடிவை எடுத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் குடும்ப பிரச்சனையால் தான் தற்கொலை செய்துக்கொண்டாரா? அல்லது கல்லூரியில் ஏதும் பிரச்சனையா? உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதியில் இருந்து வீட்டுக்கு வந்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?