பகீர் வீடியோ... சிறுமியை துரத்தும் தெரு நாய்கள்... அலறியடித்து கூச்சலிட்ட சிறுமி!

 

தமிழகத்தில் சமீபமாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் இது விஷயத்தில் கவனமெடுத்தாலும், பெருநகரங்களில் மட்டுமே இது குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள், நாய்களால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே சிறுமியை 3 தெரு நாய்கள் கடிக்க விரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி பகுதியில் ரசூல் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. ஆனால் அப்பகுதி முழுவதும் ஏராளமான நாய்கள் சுற்றி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் குழந்தைகள், பொதுமக்களை துரத்தி கடித்து வருகின்றது.

இந்த நிலையில், கடந்த மாதம் 27-ம் தேதி அந்த வழியாக பானு என்ற சிறுமி சென்றுள்ளார். அப்போது மூன்று நாய்கள் ஒன்று சேர்ந்து சிறுமையை கடிக்க துரத்தி உள்ளது. அப்போது அருகே இருந்தவர்கள் மூன்று நாய்களையும் துரத்தி விட்டனர். இதனால் சிறுமி காயம் இல்லாமல் தப்பித்தார்.

தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பள்ளபட்டி நகராட்சி நிர்வாகம் விரைந்து நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுமியை நாய்கள் துரத்துவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!