பகீர் வீடியோ... பட்டப்பகலில் பயங்கரம்... மொபைல் கடைக்காரரின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி ரூ.50,000 கொள்ளை!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிஜ்னோரில் உள்ள ஒரு மொபைல் கடையில் சமீபத்தில் பயங்கர சம்பவம் நடந்தேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொபைல் கடைக்கு வாடிக்கையாளராக நடித்து அங்கிருந்த கடைக்காரரின் கண்களில் மிளகாய்ப் பொடி வீசி, அங்கிருந்த ரூ.50,000 பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடுக்கிடும் சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் முழுமையாக பதிவு செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.
பயந்த நிலையில் பதறிய சுஹைல், தனது கண்களைத் திறக்க முடியாமல் தவித்தார். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை அடையாளம் காண முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!