கொழுந்தனாரை கொன்று வீசிய பெண்.. செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் நடத்திய ஊர் மக்கள்!

 

தெலங்கானா மாநிலம் சிக்னல் தாண்டா கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது கணவர் 6 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்து விட்டார். இதனையடுத்து அப்பெண் தனது பிள்ளைகளுடன் கணவர் ஊரில் தனியாக வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில், கணவனை இழந்த நிலையில் அப்பெண்ணுக்கு வேறு சிலருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. கள்ளக் காதலனுடன் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் அப்பகுதியினர் கூறுகின்றனர். இதனை அறிந்த கணவரின் சகோதரர் ராஜூவும் அந்த பெண்ணை, தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தி உள்ளார்.

ஆனால் ராஜூ தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் ராஜூவை தீர்த்துக் கட்ட அப்பெண் முடிவு செய்தார். இதையடுத்து ராஜூவை ஆற்றங்கரைக்கு வரவழைத்த அந்த பெண், தனது ஆண் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து ராஜூவை அடித்து கொலை செய்துள்ளார்.

இதனிடையே, ஆற்றங்கரையில் ராஜூவின் உடலை கிராம மக்கள் மீட்டனர். அப்போது அவரது சகோதரர் மனைவி தான் கொலை செய்தார் என்பது கிராம மக்களுக்கு தெரிய வந்தது. அப்பெண்ணை பிடித்து கேட்ட போது, அவரும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள், அந்த பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றனர். இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?